கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு அலைகளில் தப்பித்தவர்கள் கூட இந்த அலையில் சிக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நடிகையும், டான்ஸருமான ஷோபனாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஷோபனா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, போதிய முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கால்களில் வலி, குளிர், தொண்டை வலியாக இருந்தது. இது முதல் நாள் தான். அடுத்தடுத்த நாட்களில் அறிகுறிகள் குறைந்துவிட்டது. நல்ல வேளை நான் 2 தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன்.
அதனால் பாதிப்பு குறைவாக இருந்தது. எனவே, அனைவரும் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வேரியன்ட்டுடன் பான்டமிக் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.