சினிமாவில் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தற்போது கணவனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபல நடிகைகளின் லிஸ்ட் பார்க்கலாம்.
ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகை நஸ்ரியா நசீம். இவர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது நஸ்ரியா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
2017 -ம் ஆண்டு வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இவர் 2019 -ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து சாயிஷா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். சமீபத்தில் பத்து தல படத்தில் ஒரு பாடலில் கவர்ச்சியாக நடனமாடியிருப்பார்.