காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உட்கார்ந்து அழுது புலம்பவில்லை. மாறாக காதல் பாடலை இயக்க ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.
அங்கு அவர் தன் குழுவுடன் சேர்ந்து பேசியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
காதல் திருமணம், அதுவும் 18 ஆண்டுகள் கழித்து பிரிவில் முடிந்துவிட்டது. பிரிவை அறிவித்த கையோடு இப்படி காதல் பாடலை இயக்க தனி தைரியம் வேண்டும். ஐஸ்வர்யாவுக்கு அது இருக்கிறது.
வேதனையோடு இருக்கும் இந்த நேரத்தில் அவரால் எப்படித் தான் காதல் பாடலை படமாக்க முடிகிறதோ?. நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. ஐஸ்வர்யாவை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ், ஐஸ்வர்யா
காதல் பாடல் ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கும் ஐஸ்வர்யா சித்தாரா ஹோட்டலில் தங்கியிருக்கிறார். வாத்தி படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷும் அதே ஹோட்டலில் தான் இருக்கிறார்.
இப்படி ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பது தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் பார்த்துக் கொண்டார்களா என்பது தான் தெரியவில்லை.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.