மத்திய பிரதேச மாநிலத்தில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கர் சில தினங்களுக்கு முன்பு இந்தூரில் உள்ள வீட்டில் மின் விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் உலுக்கியது.
தற்கொலைக்கு முன்பு வைஷாலி எழுதிய கடிதத்தை அவரது வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
அதில் முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
வைஷாலி தாக்கரின் முன்னாள் காதலன் ராகுல் என்பதும், அவர் பக்கத்து வீட்டில் வசிப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
வைஷாலி தூக்கில் தொங்கியதும் தலைமறைவான ராகுல் மற்றும் அவரது மனைவியை தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களில் தேடினர்.
தகவல் தெரிவிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தனர். தற்போது முன்னாள் காதலன் ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி தப்பி ஓடி விட்டார்.
வைஷாலிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இது தெரிந்து வைஷாலியை ராகுல் துன்புறுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.