மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களாக பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து தைரியமாக பேசும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டு, திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
சன்னி லியோன் பேச்சு
“நாம் எதிர்கொள்ளும் தருணங்களில், ‘நோ’ சொல்ல வேண்டிய இடத்தில் அதனை தைரியமாக சொல்ல வேண்டும். ஏற்க முடியாத சூழ்நிலைகளில் இருந்து வெளியேற தயாராக இருக்க வேண்டும். நமக்கான எல்லைகளை நாமே தீர்மானிக்க வேண்டும். இழப்புகளை பற்றிய கவலைகளில் சிக்காமல், உறுதியுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
சன்னி லியோனின் கருத்துக்கு பின்னர், பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா, “இத்தகைய பாலியல் தொந்தரவுகள் பல ஆண்டுகளாக நடந்து வருவதை மறுக்க முடியாது. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும், நிச்சயமாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று கூறினார்.