தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டது அனைருக்கும் தெரியும். மனைவியை பிரிந்த தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தன்னை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வித்தியாசமான கதையில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படம் அண்மையில் தான் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இம்முறை காதலும், ஆக்ஷனும் கலந்த கதையில் நடிக்கிறாராம் தனுஷ். அந்த படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார் ஆனந்த் எல். ராய்.
இது தவிர்த்து மேலும் ஒரு மெகா பட்ஜெட் பாலிவுட் படத்தில் நடிக்கிறாராம் தனுஷ். பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம்.
அத்ரங்கி ரே படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தனுஷை தங்கள் படங்களில் நடிக்க பாலிவுட் இயக்குநர்கள் போட்டா போட்டி போடுகிறார்களாம்.
மனைவியை பிரிந்த சோகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தன்னை தேடி வந்த காதல் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டருக்கிறார் தனுஷ். ஐஸ்வர்யா கூட காதல் பாடலை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.