சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவியுடன் சேர்ந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார் நாக சைதன்யா. அந்த படம் ரிலீஸான கையோடு சமந்தாவும், நாக சைத்யாவும் பிரிந்துவிட்டார்கள். படம் ரிலீஸானதும் பிரிவு முடிவை அறிவிக்க காத்திருந்தார்களாம்.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியருக்கிறார் தனுஷ். அவர் தன் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார்.
சேகர் கம்முலா படத்தில் நடிக்க கமிட்டானதும் தனுஷின் திருமண வாழ்க்கை இப்படியாகிவிட்டது. சேகர் கம்முலா ஒரு விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட். அவர் ராசி அப்படி என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.
சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு காரணம் இருக்கிறது. அதே போன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியவும் காரணம் உள்ளது. 6 ஆண்டுகளாகவே பிரச்சனையாக இருந்ததால் பிரிந்துவிட்டனர். இதில் சேகர் கம்முலா எங்கிருந்து வந்தார் என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாத்தி படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் எடுக்கப்படுகிறது. அந்த படத்தில் நடிக்க தனுஷுக்கு ரூ. 100 கோடி சம்பளம் என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.