படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றபோது ஐஸ்வர்யா தனுஷை அசிங்கப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கான காரணம் என நாள்தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளன.
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களின் காதலை 2004ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் என்ற அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களுக்கு 2006ஆம் ஆண்டு யாத்ரா என்ற மகனும் 2010ஆம் ஆண்டு லிங்கா என்ற மகனும் பிறந்தனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளனர்.
தோளுக்கு மேல் மகன்கள் வளர்ந்துள்ள நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களின் பிரிவு முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால் பிரச்சனைகள் எல்லை மீறி விட்டதால் இனியும் சேர்ந்து வாழ்வது சரியாக இருக்காது என நடிகர் தனுஷ் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை விவாகரத்து வரை செல்வதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார். அப்போது தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இருவரையும் உடன் அழைத்து சென்றார் தனுஷ்.
தனுஷ் படப்பிடிப்பில் இருந்தப்போது அவருடைய செல்போன் ஐஸ்வர்யாவிடம் இருந்துள்ளது.
அப்போது சில நடிகைகளிடம் இருந்து நடிகர் தனுஷுக்கு போன் கால்ஸ் வந்துள்ளது. ஐஸ்வர்யா காலை எடுத்து பேசியபோது அவர்கள் பதிலளிக்காமல் துண்டித்துவிட்டனர்.
இதேபோல் அந்த நடிகைகளிடம் இருந்து சில மேஸேஜ்களும் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தனுஷிடம் இன்னும் நீங்கள் திருந்தவில்லையா என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் கடுப்பான தனுஷ் இனிமேலும் ஒன்றாக இருப்பது சரியாக இருக்காது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகும் இருவருக்குள்ளும் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் இருவரும் பிரிந்தே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தான் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் தனுஷுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் இருவருடன் தொடர்பு என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் ஒரு தொகுப்பாளருடனும் தனுஷுக்கு நெருக்கம் என்றும் பேசப்பட்டது.
இந்தப் பிரச்சனை நடிகர் ரஜினி வரை சென்று பஞ்சாயத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.