தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
மேலும் இவர்களின் விவாகரத்து முடிவை ரஜினி சிறியதும் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வருகிறது.
குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இருவரும் ஒன்றாக திருப்பதி கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்கு சென்றுவிட்டு வந்து மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யாவிற்கு அவருடைய அம்மா லதா ரஜினிகாந்த் பலவித அறிவுரைகளும், குழந்தைகளின் எதிர்காலத்தை யோசித்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் கஸ்தூரி ராஜாவும் இருவரையும் கோயிலுக்கு அனுப்புவதற்கான வேளைகளில் இறங்கியுள்ளாராம். இப்படி இரண்டு குடும்பத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே ஒன்றாக கோயிலுக்கு செல்ல சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் இந்த முடிவால் குடும்பத்தினர் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.