விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான ஓட்டு யாருக்கு கிடைத்திருக்கிறதோ அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
இந்த நடைமுறை தான் பிக்பாஸில் கடந்த 6 சீசன்களாக பேணப்பட்டு வருகின்றது. அதேபோல் திங்கட்கிழமை ஆரம்பமாகும் வாக்கெடுப்பு நடைமுறை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெறும்.
மேலும் இந்த 5 நாட்கள் பதிவான வாக்குகளின் அடிப்படையில் தான் வெளியேற்றுப் படலம் நடக்கும். ஆனால் இந்த வாரம் ஓட்டு போடும் நாள் 5-ல் இருந்து நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஷிவின், விக்ரமன், அசீம், மைனா, ரச்சிதா, கதிரவன் ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இதில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால், இவர்கள் இருவரும் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை.
ஆனால் எஞ்சியுள்ள 5 பேருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளதால், அவர்கள் 5 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.