பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து போட்டியாளர்களுமே பழகி போன முகம் என்பதால் ஒவ்வொரு போட்டியாளருமே அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காட்டிலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் உள்ளது. வனிதா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷாரிக் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் சண்டைக் கோழிகளாக வலம் வருகின்றனர்.
எந்த டாஸ்க்காக இருந்தாலும் இவர்களால் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வாரம்தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகின்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தவாரம் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸில் பாலாஜி முருகதாஸ், தாமரை, நிரூப், ஜூலி, அனிதா சம்பத், ஸ்னேகன், ஷாரிக், அபினய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அன் அஃப்பிஷயல் வாக்குகளின் அடிப்படையில் கடைசி மூன்று இடங்களில் ஸ்னேகன், ஷாரிக், அபினய் ஆகியோர் உள்ளனர்.
இந்த மூன்று பேரில் கடைசி இடத்தில் உள்ளது நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அபினய் தான். ஆனால் ஆரம்பம் முதலே அவர் குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் தான் உள்ளார். ஆனால் அவரை வெளியேற்றும் முடிவில் பிக்பாஸ் இல்லை, ஆகையால் சினேகன் மற்றும் ஷாரிக் ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.