நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருக்கிறார்.
மேலும் விஜய் டிவியில் அது இது எது என்ற ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் டிவி ரசிகர்களையும் தாண்டி சினிமா நட்சத்திரங்களிடமும் பிரபலமானார்.
அதன் காரணமாகத்தான் இவருக்கு மெரினா படத்தில் நடிக்க வாய்ப்பும் வந்தது. இயக்குனர் பாண்டிராஜ் இவரை மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின் இவருக்கு தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
அவரின் நகைச்சுவை மிகுந்த அசத்தலான நடிப்பு ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் தனுஷ் தயாரிப்பில் எதிர் நீச்சல் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.
இந்த படம் அவர் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர். சிறுவயதில் அவர் ஊரில் ரஜினி ரசிகர் மன்றத்திலும் இருந்திருக்கிறார்.
பின் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்தாராம். ஒருநாள் 3 படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயன் தனது ஆசையை ஐஸ்வர்யாவிடம் சொல்லியிருகிறார்.
அதற்கு ஐஸ்வர்யா தான் உங்களை என் அப்பாவை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என கூறியிருக்கிறார். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயனை ஐஸ்வர்யா ரஜினியின் இல்லத்திற்கு அழைத்துள்ளார்.
ரஜினி தற்போது சற்று ஓய்வில் இருப்பதாகவும், இப்பொழுது வந்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சிவகார்த்திகேயனை அழைத்திருக்கிறார். இதனை கேட்ட சிவகார்த்திகேயன் தான் செய்துகொண்டிருந்த வேலைகளை நிறுத்திவிட்டு ரஜினியின் இல்லத்திற்கு விரைந்திருக்கிறார்.
அப்போதுதான் ரஜினியை நேரில் சந்திக்கவேண்டும் என்ற அவரது பல ஆண்டு ஆசை நிறைவேறியுள்ளது. மேலும் ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.