காதல் திருமணம் செய்து கணவன் மனைவியாக 18 ஆண்டுகள் வாழ்ந்த ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த மாதம் 17 ஆம் தேதி இனி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அவர்களின் பிரிவு முடிவு ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரின் பிரிவு முடிவை சற்றும் எதிர்பாராத ரஜினிகாந்த், கணவருடன் வாழ்ந்தாக வேண்டும் என்று ஐஸ்வர்யாவுக்கு ஆர்டர் போட்டார். ரஜினியின் விஸ்வரூபத்தை பார்த்த ஐஸ்வர்யா, ஹைத்ராபாத்தில் தனுஷ் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்று மீண்டும் சேர்ந்து வாழலாம் என கதறினார்.
அவசரப்பட்டு விட்டதாகவும் அப்பாவுக்காக இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கெஞ்சியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஐஸ்வர்யாவின் கதறலை கேட்ட தனுஷ், இருவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தோம், தற்போது உடனடியாக உன்னைப் போல் என்னால் மனதை மாற்றிக்கொள்ள முடியாது. எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியானது.
ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் தனுஷிடம் இருந்து இதுவரை எந்த சாதமான தகவலும் வரவில்லை. இதனால் நமக்கென்று இருந்தால் நமக்கு கிடைக்கும் என்று தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. தனுஷ் எப்படியும் பிள்ளைகளின் நலனுக்காக நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கையுடன் உள்ளார் ரஜினி.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது தோழிகளிடம் அப்பாவின் உடல் நலனை பற்றி யோசிக்காமல் அவசரப்பட்டு கணவரை பிரிந்து விட்டதாக புலம்பி கண்ணீர்விட்டு வருகிறாராம்.
தன்னால் அப்பாவின் மனதுக்கும் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று வேதனைப்பட்டு வரும் ஐஸ்வர்யா, தனுஷின் முடிவு நல்லதாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.