பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. 2013ஆம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ஆபாசப் படங்களிலும் நடித்து வரும் நடிகை பூனம் பாண்டே தனது ஆபாச படங்களுக்கு என தனி வெப்சைட்டையும் நடத்தி வருகிறார். பல்வேறு சர்ச்சகைளுக்கும் பெயர் போனவர் பூனம் பாண்டே.
பூனம் பாண்டே சாம் பாம்பே என்பவருடன் 4 ஆண்டுகள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு அவ்வப்போது அனலை கிளப்பி வந்தார்.
இந்நிலையில் பூனம் பாண்டே தனது காதலரான சாம் பாம்பேவை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோட பூனம் பாண்டேவும் சாம் பாம்பேவும் கோவாவுக்கு ஹனிமூன் சென்றனர். அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கோவா போலீஸில் புகார் அளித்தார் பூனம் பாண்டே. பூனம் பாண்டேவின் புகாரை தொடர்ந்து சாம் பாம்பே கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு இருவரும் சமாதானமானதாக கூறப்பட்டது. பின்னர் மீண்டும் இருவருக்கும் இடையில் பிரச்சனை என தகவல் பரவியது.
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் லாக் அப் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது தனது கணவர் குறித்து பூனம் பாண்டே கூறிய விஷயங்கள் பகீர் கிளப்பியுள்ளது. அதாவது சாம் பாம்பே தினமும் தன்னை நாயை அடிப்பது போல் அடித்து துன்புறுத்துவார் என்றும் அவருடைய டார்ச்சரால் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.
சாம் பாம்பேவுடன் இருந்த நான்கு ஆண்டுகளும் தான் சரியாக தூங்கவில்லை என்றும் தான் சரியாக சாப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார் பூனம் பாண்டே. பல நாட்கள் தான் சாப்பிடாமல் இருந்ததாகவும் அதனால்தான் தனக்கு வடை பாவ் தனக்கு பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் தினமும் அடி வாங்குவேன் என்றும், தன்னை பெட்ரூம்மில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கொட்டி தீர்த்துள்ளார். தான் யாரிடம் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்ததாகவும், தனது தொலைபேசி உடைந்ததால் தன்னால் எந்த காலும் செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
பல முறை தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததாகவும் பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார் பூனம் பாண்டே. தான் இன்று இங்கு அமர்ந்து பேசுவதே பெரிய விஷயம் என்று கூறியுள்ள பூனம் பாண்டே, பாதிக்கப்படும் பெண்கள் அதனை வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது கணவர் மீது பூனம் பாண்டே கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.