பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இவரது கணவர் கணேஷ்கரும் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விட்டு திடீரென தலைமறைவாகி விட்டதால் அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் கணேஷ்கர் நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதியது. அப்போது அவரது காரில் பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் சேரவே கணேஷ் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கணேஷ் மனைவி ஆர்த்தி, அவர் வீட்டிற்கு வரவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் விடிய விடிய ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் போலீசார் அவரை தேடியுள்ளனர்.
ஆனால் கணேஷ்கர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கணேஷ்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.