நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இனி பிரிந்து வாழப்போவதாக கடந்த மாதம் அறிவித்தனர். இவர்கள் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சமூகத்தளங்களில் ஆளாளுக்கு ஒரு காரணத்தை பதிவிட்டு வந்தனர். இருப்பினும் பல ரசிகர்கள் இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இவர்களது வீட்டிலும் இந்த விஷயம் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிக்கு இந்த விவாகரத்து செய்தி இடியாய் விழுந்தது. இதனால் மனமுடைந்த ரஜினி வீட்டில் உள்ள அனைவரிடமும் கோபத்தில் இருக்கிறாராம்.
குறிப்பாக ஐஸ்வர்யாவுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம். இதன் காரணமாக தன் தந்தையின் கோபத்தை தணிக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழப்போவதாக தகவல்கள் வந்தன.
இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் தனுஷ் தன் அடுத்த பட வேலைகளில் செம பிஸியாக உள்ளார். வாத்தி படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்த தனுஷ் தற்போது அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
மறுபக்கம் ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடலில் பிஸியாக உள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு அவர் இயக்கும் ஆல்பம் பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஐஸ்வர்யா.
அந்த பேட்டியில் அவரிடம் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, காதல் என்பது ஒருவருடன் மட்டும் அடங்கிவிடுவதில்லை. நான் என் பெற்றோர் மற்றும் பிள்ளைகளை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் அந்த பேட்டியில் தனுஷ் பற்றி எந்த கருத்தையும் பேசவில்லை.
இதனால் ஐஸ்வர்யா தன் விவாகரத்து முடிவில் தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டியில் தனுஷ் பற்றி ஏதும் பேசாதது, இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதை குறிக்கின்றது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.