விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் பிரபலமானார் நடிகை வனிதா விஜயகுமார். இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்டவர் நடிகை கஸ்தூரி.
இந்த நிகழ்ச்சியின் போதே இருவரில் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது. ஒரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் கஸ்தூரி டீச்சராகவும் சக ஹவுஸ்மேட்ஸ் ஸ்டூடன்ட்ஸாகவும் இருந்தனர். அப்போது வனிதாவை கஸ்தூரி வாத்து வனிதா என்று குறிப்பிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்தது. சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி வசைப்பாடிக் கொண்டனர்.
பீட்டர் பாலை வனிதா மூன்றாவது திருமணம் செய்தபோது, கஸ்தூரி பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக இருந்தார் கஸ்தூரி.
இதனாலும் இருவருக்குள்ளும் மோதல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் வனிதா டிவிட்டரில் கஸ்தூரியை பிளாக் செய்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் கஸ்தூரியை கடுமையாக விளாசியுள்ளார்.
சக போட்டியாளரான அபிராமியிடம் பேசிய வனிதா கஸ்தூரியை உலக மகா டிராமா என்றும் வேலை இல்லாத பொம்பளை என்றும் விமர்சித்துள்ளார்.
பதிலுக்கு அபிராமியும் கஸ்தூரியை விமர்சித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கஸ்தூரியை பழி தீர்த்து விட்டதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.