சமந்தாவும், நாக சைதன்யாவும் செய்த காரியம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பிரிவுக்கு பிறகு முதல் முறையாக சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒரே இடத்திற்கு வந்திருக்கிறார்கள். ராமநாயுடு ஸ்டியோஸுக்கு தான் அண்மையில் வந்தனர்.
தன்னுடைய பங்கரராஜு படப்பிடிப்புக்காக நாக சைதன்யாவும், யசோதா பட வேலைக்காக சமந்தாவும் ராமநாயுடு ஸ்டுடியோஸுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரே இடத்தில் இருந்தபோதும் சமந்தாவும், நாக சைதன்யாவும் பேசிக்கொள்ளவில்லையாம். தங்கள் வேலை முடிந்ததும் காரில் கிளம்பிச் சென்றுவிட்டார்களாம்.
காதல் திருமணம் செய்த சமந்தாவும், நாக சைதன்யாவும் 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி விவாகரத்து குறித்து அறிவித்தனர். பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்றார்கள்.
விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டார் சமந்தா.
பிரிந்தாலும் நண்பர்களாக இருப்போம் என்றீர்களே. இப்படி முதல் முறையாக ஒரே இடத்திற்கு சென்றும், பார்த்தும் பார்க்காமல் சென்றிருக்கிறார்களே. அப்படி என்றால் எல்லாம் பொய்யா சமந்தா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கணவரை பிரிந்த பிறகு படங்களில் பிசியாகிவிட்டார் சமந்தா. புத்தாண்டை கொண்டாட தோழிகளுடன் கோவாவுக்கு சென்றார்.
சமந்தா தங்கள் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டாலும் எப்பொழுதும் தன் மகள் தான் என நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.