தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார்.
நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அண்மையில் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர்.
அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரசவ வலி குறித்து சமந்தா பேசியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதில், ’பெண்கள்தான் மிகவும் வலிமையானவர்கள்.
உலகிலேயே மிகப்பெரிய வலி உடையது பிரசவம் தான் என்றும் ஆனால் அந்த வலியையும் ஒரு பெண் தாங்கிக் கொண்டு குழந்தை பெறுகிறாள் ஆனால் அதே நேரத்தில் தான் பெற்ற குழந்தையை ஒருதாய் பார்த்தவுடன் தனது வலி எல்லாம் மறந்து அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பு உண்டாகும். அதற்கு ஈடு இணையே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் இந்த கருத்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முன்னதாக நாக சைதன்யாவை சமந்தா பிரிந்த போது, குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்கவே விவாகரத்து செய்வதாக சிலர் வதந்திகள் பரப்பினார்கள்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்மையின் உன்னதம் குறித்து சமந்தா பேசியுள்ள இந்த பேட்டி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.