இயக்குநர் பாலாவும் அவரது மனைவியும் விவாகரத்து செய்துள்ள நிலையில் பாலா மீது குற்றச்சாட்டுக்களை அள்ளிவிட்டுள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
இயக்குநர் பாலாவுக்கும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகரின் மகளுமான முத்துமலருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் பிரார்த்தனா என்ற மகள் உள்ள நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் பிரிந்திருந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் அரங்கேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் பாலா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.
இயக்குநர் பாலாவுக்கு நடிகைகள் அழகாக இருந்தாலே பிடிக்காது. கரியை பூச சொல்வார். அல்லது கறுப்பு மேக்கப் போட சொல்வார். அந்த அளவுக்கு சேடிஸ்ட். அழகான பெண்களை அவருக்கு பிடிக்காது. அதுமட்டுமின்றி அவருடைய படங்களில் நடித்தால் ஊனமாகிவிடுவார்கள்.
பாலா இயக்கத்தில் பெண்ணாகவும் மாற்றுக்கண் உள்ளவராகவும் நடித்த விஷால் நீண்ட நாட்கள் அதனால் பாதிக்கப்பட்டார். கண் சரியாகவே இல்லை. சேது படத்தில் நடித்த விக்ரம் மனநோயாளியாக காட்டப்பட்டார். அவருக்கும் அந்த நோய் நீண்ட நாள் தீரவில்லை. இப்படி நடிகர் நடிகைகளை வதைப்பவர் பாலா.
திருமண ஆசையில்லாமல் திருமணம் செய்து கொண்ட பாலா மனைவியை மிகவும் கொடுமைப்படுத்தினார். போதை பழக்கமும் புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்தது.
சாமி படத்தில் விக்ரம் இட்லியில் பீரை ஊற்றி பிசைந்து அடிக்கும் காட்சி பாலாவிடம் இருந்துதான் காப்பியடிக்கப்பட்டது என தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா குறித்து பகீர் குற்றச்சாட்டுக்களை அள்ளிவிட்டுள்ளார் பயில்வான்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.