பிக்பாஸ் வீட்டில் எந்த வேலையும் வனிதா செய்யவில்லை என ஹவுஸ்மேட்டுகள் குற்றம் சாட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்தெடுக்க இறுதி டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் இறுதிப்போட்டியாளராக இருக்கும் தாமரை மற்றும் பாலாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்த டாஸ்க்கின்படி தொட்டிலில் பொம்மை குழந்தை இருக்கும். அதை யாருக்கும் தெரியாதபடி யார் எடுக்கிறார்களோ, அவரே வெற்றியாளர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வார பிக்பாஸ் தலைவராக தாமரை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனால் பிக்பாஸ் வீட்டில் யார் எந்த வேலை செய்யவேண்டும் என்று உத்தரவிடுகிறார்.
அப்போது வனிதா அக்காவை எந்த டீமுலுயும் போட விரும்பம் இல்லை என்று சொல்கிறார். எந்த டீமில் அவங்க சென்றாலும் அந்த டீம் பாதிக்கப்படுகிறது என்று தாமரை கூறுகிறார்.
ஆனால் இந்த விஷயம் வனிதாவிற்கு சாதகமாகதானே அமையும். ஏற்கனவே அவங்க எந்த டாஸ்க்கிலும் விளையாட மாட்டீறாங்க.
நான்கு டீமில் எதிலும் இல்லை. அப்புறம் பிக்பாஸ் வீட்டில் என்னதான் செய்யுறாங்க என அனிதா சம்பத் கேள்வி கேட்கிறார். வனிதாவை எந்த டீமிலும் போட எனக்கு பிடிக்கலைஎன தாமரைச்செல்வி சொல்ல, அதற்கு அனிதா சம்பத், அது அவங்களுக்கு அதிக சலுகை கொடுப்பது போன்று.
அதனால் அவங்களை குக்கிங் டீமில் போடுங்க. வேலை செய்யட்டும். அவங்க வேலையே செய்யவில்லை என்றால்அப்போது கேட்போம் என்கிறார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.