எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் பஸ் கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணம், இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .