தென்மராட்சியின் மீசாலை, அல்லாரை கிராமத்தில் 15 நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தைக் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்று பார்த்த போது, சேவலை விழுங்க மலைப்பாம்பு முற்பட்டுள்ளது.
இதையடுத்து விரைந்து செயற்பட்ட வீட்டில் இருந்தவர்கள், பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்துக் கட்டி, வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம், கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.