ஹாலிஎல- வேவல்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர், தனது 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளதுடன், அவரும் விஷ மருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நால்வரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது தாயே தனது 6, 4, மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு விஷத்தை பருக்கியுள்ளார்.
தனது குடும்ப வறுமை காரணமாகவே தனது பிள்ளைகளுக்கு விஷத்தை பருக்கி தானும் பருகியதாக தாய், வைத்தியசாலையில் தெரிவித்தார் என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதானி பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.