ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரிடம் அவர் சரணடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று (02) ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால“ கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த மூன்று மாணவர்களில் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.