இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று(24) மாலை 5.30 மணிமுதல் ஒரு மணிநேரத்துக்கு நான்கு வலயங்களில் மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம், முன்னதாக அறிவித்திருந்தது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.