பருத்தித்துறை – புலோலி பகுதியில் பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தர் சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டத்தால் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் நேற்று(20) பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் பட்டத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர்.
அப்போது, இரண்டாவது பட்டத்தின் கயிற்றை பிடித்திருந்தவர், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.
சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட்டுவிட்டு கீழே விழுந்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.