முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகள், வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவர் என பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக பிரிட்டன் நாட்டு அதிரகாரிகள் கூறியதாவது:
முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் எவ்வித பரிசோதனையும் இன்றி பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவர்.
தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டாம். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர், தங்கள் பயணத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்றுடன் வர வேண்டும்.
பிரிட்டன் வந்த இரண்டாவது நாள் அவர்களுக்கு ஆர்.டி., – பி.சி.ஆர்., பரிசோதனை நடத்தப்படும். பிரிட்டனில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி பணிகள் வெற்றி அடைந்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, பிரிட்டனில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.