லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இன்று(13) காலை பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தெசார ஜயசிங்க, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெசார ஜயசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்படுவதாகவும் புதிய தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர், மீண்டும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.