டொரொன்டோவில் இன்று முதல் மீண்டும் பனிப்பொழிவும் உறைபனித் தரையும் எதிர்கொள்ளக்கூடும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 3 பாகை செல்சியசாக இருக்கும்.
இரவு 0 பாகை செல்சியசாக வெப்பநிலை குறையும் என்பதுடன் மாலை நேரத்தில் 2 – 4 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்த மாதம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பனிப் புயல்களில் 50 சென்றிமீற்றருக்கும் அதிகமான பனி வீழ்ந்ததன் பின்னர், நகரம் காணும் முதல் பனிப்பொழிவு என கூறப்படுகிறது.
இன்று 40% மழை அல்லது பனித்துளிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், நாளை 60% பனிப்பொழிவு அல்லது மழை பெய்யும் சாத்தியம் உண்டு எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.