லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில், சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் பலியான நபர் லெம்லியர் தோட்டத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் கூறியுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.