தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி கட்டாயம் வழங்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (08) அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பும் டொலர்களுக்கு குறைந்தது 240 ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என தான் திறைச்சேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிப்புரிபவர்களுக்காக எனது அமைச்சின் ஊடாக காப்புறுதி வழங்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதனை அனைவரும் தெரிந்துகொள்வீர்கள்.
வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு கட்டாயமாக 15 ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.