அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை
நானுஓயா, டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஆலயத்தில் இருந்த உண்டியலில் இருந்த பணமும் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை குறித்த ஆலயம் இதற்கு முன்னரும் உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் முறைப்பாடு செய்தும், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாக சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.