டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நம்பவர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
இதில் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே வழக்கம் போது மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெல்லும், யார் யார் சிறப்பாக விளையாடுவார்கள் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தும், இந்திய அணி குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், “சூர்யகுமார் யாதவின் இந்த வளர்ச்சியை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதே பெரிய விசயமாக இருந்தது, ஆனால் தற்போது அவர் இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்து வருகிறார்.
அவர் ஆபத்தான பேட்ஸ்மேன், தற்போதைய அணியில் சூர்யகுமார் யாதவ் மிக சிறந்த டி.20 பேட்ஸ்மேன். இந்திய அணியில் மட்டுமல்ல சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த டி.20 வீரர்களில் சூர்யகுமார் யாதவும் ஒருவர். டி.20 உலகக்கோப்பை தொடரிலும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.