கம்பளை நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு பின்னால், உள்ள காட்டில் சாராயம் அருந்தி விட்டு, பீடி புகைத்துக்கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் இம்முறை உயர் தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை பாடசாலை விடுமுறை நாளில் கம்பளை நகருக்கு வந்துள்ள இந்த மாணவர்கள் நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு போத்தல் சாராயத்தை கொள்வனவு செய்துள்ளனர்.
அத்துடன், மற்றைய கடையொன்றில் கடலை மற்றும் பீடி ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளனர்.
இதனையடுத்து பாடசாலைக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் சென்று மது அருந்தி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை பரீட்சைக்காக மேலதிக வகுப்பு மற்றும் பாடங்களை படிக்க வேண்டும் எனக்கூறி தமது பிள்ளைகள் வீட்டில் இருந்து வந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.