இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பெதும் நிசங்க 75 ரன்கள் குவித்தார். கேப்டன் சனக்க 47 ரன்களும், குணதிலக 38 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.
துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன் (39), ஸ்ரேயாஸ் அய்யர் (74- நாட் அவுட்), ஜடேஜா (45- நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை தரம்சாலாவில் நடைபெறுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.