யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரில் உள்ள கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.