யாழ். தென்மராட்சி – தனங்கிளப்பு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அயலவர்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, இன்று (01) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், உயிரிழந்து பல நாட்கள் கடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.