மட்டக்களப்பு வாவியின் குருமணிவெளி ஓடத்துறைப் பக்கமிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று (22) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், குருமண்வெளி 12ஐ சேர்ந்த 68 வயதுடைய குமாரையா கோபாலசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், நேற்று முன்தினம் (21) இரவு 11 மணி வரை தனது வீட்டில் இருந்துள்ளதுடன், அதன்பின்னர் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையிலேயே, நேற்றுக் காலை வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக அறிந்த உறவினர்கள், அங்கு சென்று பார்வையிட்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடையவியல் பொலிஸாரும் சடலத்தைப் பார்வையிட்டதுடன், மரணித்த நபர் பாவித்ததாகக் கருதப்படும் ஊன்றுகோல் மற்றும் டோச் லைட் ஆகியவற்றறை, ஆற்றங்கரை ஓரமாக இருந்து மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தைப் பார்வையிட்டதுடன், பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.