தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி நீக்கப்படுமா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தைக்கு டீசல் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுகின்றமை, ஒக்டோபர் நடுப்பகுதி வரை தாமதமாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.