மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போயுள்ள மற்றையவரின் சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று (12) படகொன்றில் பயணித்துள்ளனர். மன்னார் – பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.
அந்நபர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட மற்றுமொருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
படகில் இருந்த ஒருவர் மாத்திரம் பிரதேச மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.