யாழ்ப்பாணம் – நெடுந்தீவு, 5 ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களால் குறித்த சடலம் தொடர்பில் நேற்று(28) பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.