மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளன.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி 306 ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவிருந்தன.
எனினும் , புதிய நியமன வழங்கலை தற்காலிகமாக இடைநிறுத்தி நிதி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டமையினால், ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கள் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டது.
ஏனைய மாகாணங்களில் முன்னதாகவே குறித்த நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும் மத்திய மாகாணத்தில் இழுபறி நிலைமை காணப்பட்டது.
இதனால் குறித்த ஆசிரிய உதவியாளர்கள் தமது தகமையினை உரிய காலத்தில் பூர்த்தி செய்திருந்த போதிலும் 10,000 ரூபாய் கொடுப்பனவுடன் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த நியமனங்களை இன்றைய தினம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நிகழ்வு பல்லேகலை, குண்டசாலையில் உள்ள மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் 9.30க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் இதுவரையில் ஆசிரிய உதவியாளர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் 0719 761 150 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு நியமனங்களை உறுதிசெய்துகொள்ளுமாறு மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ண தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.