நாம் சிறுவயதில் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் கல்யாணத்தன்று கூட தாயிடம் பசியாறியிருக்கிறார். இந்தத் தகவலை, தொழில்ரீதியாக திருமண நிகழ்வில் ஏற்பாடுகளை செய்து வரும் ஜோர்ஜி மிட்செல் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இவர் இங்கிலாந்தில் இருக்கும் தொழில்முறை திருமண திட்டமிடுபவர். இவர் தனது சக ஊழியர் ஜென்னி பகிர்ந்து கொண்ட அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார். இந்த விவகாரம் மணப்பெண்ணை மட்டுமின்றி குடும்பத்தினர், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பதை விளக்கியுள்ளார்.
திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகன், தனது தாயின் தாய்ப்பாலை குடித்து கொண்டிருந்ததை மேக்கப் ஆர்டிஸ்ட் ஜென்னி தான் கண்டிருக்கிறார். இவர் மணமகளுக்கு மேக்கப் செய்துவிட்டு கழிவறைக்கு போகும் வழியில் இதை கவனித்துள்ளார்.
மணமகன் தன் தாயிடம் இருப்பதை கண்ட அவருக்கு ஏதோ வினோதமாகபடவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துள்ளார். அப்போதுதான் மணமகன் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதை அவர் மணமகளிடம் தெரிவிக்கவே அவர் அதிர்ச்சியில் உறைந்தே போனாராம்.
திருமண வயதில் தாய்ப்பாலை அருந்துவதை பலர் அருவருப்பாக கருதுகின்றனர். சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிக்கும் சிலர், ‘மாப்பிள்ளைக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தாலும் பரவாயில்லை’ என இதை மட்டமாகக் கூறியுள்ளனர்.
‘அந்த தாயின் மார்பில் இன்னும் ஏன் பால் இருக்கிறது’ என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் அந்த மணமகனை ‘அம்மா பிள்ளை’ என கிண்டல் செய்து வருகின்றனர். மருத்துவர்களின் கூற்றுபடி, தாய்க்கு பால் சுரப்பு இருந்தால் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வரை பால் கொடுக்கலாம் என்றே கூறப்படுகிறது.