பிரான்ஸ் பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தபால் ஊழியர் போன்று வேடமிட்டு பாரிய கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 691,000 யூரோ பணத்தினை போலி தபால் ஊழியர் கொள்ளையிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை Yvelines இவ்லின் நகர காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் நீண்ட நாட்களாக தபால் நிலைய ஊழியர் போன்று வேடமணிந்து கடிதங்களை திருடியும், காசோலைகளை திருடியும் உள்ளமை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறான நபர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு காவல்துறையினர் அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.