Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இலங்கை

இயற்கையின் கோர தாண்டவத்தால் 15 பேர் பலி

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
November 10, 2021 8:10 am
in இலங்கை, முக்கிய செய்திகள்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாட்டில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 மாவட்டங்களிலுள்ள 7,529 குடும்பங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் மூழ்கி 9 பேரும் மண்சரிவு காரணமாக 4 பேரும் மின்னல் தாக்கத்தால் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது – ரணில் அதிரடி

இடம்பெயர்ந்த 470 குடும்பங்களைச் சேர்ந்த 1,688 பேர் பாதுகாப்பான தங்குமிடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடக) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, முல்லைத்தீவு, கொழும்பு, திருகோணமலை, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, கிளிநொச்சி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 3,501 குடும்பங்களைச் சேர்ந்த 12,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டங்களில் 13 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. மேலும் 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பயத்தில் குடும்பத்தையே கொலை செய்த மருத்துவர்.! அதிர்ச்சி காரணம்.!!

மஹா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹாவெல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும், களுகங்கை மில்லகந்த பகுதியிலும், ஜின் கங்கை பத்தேகம பகுதியிலும், நில்வள கங்கை தல்கஹகொட பகுதியிலும், அத்தனகல ஓயா துனமலை பகுதியிலும் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக கற்பிட்டி, பாலாவி பிரதேசத்தில் நள்ளிரவு வேளையில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மஹாஓயா பெருக்கெடுத்து கிரியுல்ல நகரமும் மூழ்கியுள்ளதால், கொழும்பு – குருநாகல் வழித்தட இலக்கம் 5 இன் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வீதியூடாகப் பயணிப்போர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இன்றையதினமும், வடக்கு, வட மத்தி, வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட மகாணங்களுடன், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ள திணைக்களம், மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதால், இன்று இரவில் இருந்து மறு அறிவித்தல் வரை நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும், தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொண்டுள்ள திணைக்களம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அறிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, உடகலதெனிய பகுதியில் இன்று (09) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாரான சுரங்கனி லக்ஷிகா (36), மகள் கசுனி மாரசிங்க (08) மற்றும் உறவினரான மதுஷிகா (13) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், படையினரும் நிவாரணக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, வென்னெருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.

கடும் மழை காரணமாக இன்று (09) அதிகாலை 1.00 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

மண்சரிவுக்குள் சிக்கி காயமடைந்த மகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், வீட்டிலிருந்த அவரின் தாய், சகோதரி ஆகிய இருவரும் சிறு காயங்களுடன், உயிர் தப்பியுள்ளனர்.

சீரற்ற வானிநிலை காரணமாக பல பிரதேசங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (09) காலை வரையான காலப் பகுதியில் சுமார் 220,000 மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கான பணிக்குழுக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படும் என யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்ததையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவுகின்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக கடுமையாக மழை பெய்து வருவதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற வானிலையை பொறுத்தே விடுமுறையை நீடிப்பதா இல்லை என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: இயற்கைகாலநிலைமண்சரிவுமழைவெள்ளம்
ShareTweetSendShare

Related News

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

June 5, 2025 11:41 am
பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

June 5, 2025 11:38 am
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள்

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்பு

June 5, 2025 11:36 am
மனைவியின் தலையுடன்

மனைவியின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்

June 3, 2025 2:36 pm
ஹட்டன் - நுவரெலியா வீதி

ஹட்டன் – நுவரெலியா வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டது

June 3, 2025 12:35 pm
ஹட்டனில் 34 பேருந்துகள்

ஹட்டனில் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை

June 3, 2025 8:21 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist