ஏமன் நாட்டில் உள்ள சானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் இலவச உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலவசம் என நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஒரு பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் அடிப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து சிதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் பலரும் கிழே விழுந்ததால் நெரிசலில் சிக்கி 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.