தலவாக்கலை லோகி தோட்ட மக்கள் நுவரெலியா -ஹட்டன் பிரதான வீதியில், தலவாக்கலை லோகி வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டதில் 100 ற்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர். கடந்த (21) திகதி மாலை குறித்த வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
எனவே இதற்கு உரிய நீதி வேண்டும் இந்த கோவிலை தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் .அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் பதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.