நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆணொருவரும் இரு பெண்களும் பலியாகியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 ஆண்களும் 3 பெண்களுமாக பதின்மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,677ஆக அதிகரித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.