தற்போது மலையகத்தில் வறட்சியான காலநிலை நிலவுவதால் ஆறுகளிலும் நீரோடைகளிலும் நீர் குறைவடைந்து செல்கின்றன. அத்துடன் நீர் ஊற்றுக்களில் நீர் வற்றிக் குறைவடைந்து செல்வதால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
இதனால் மலையகத்தில் நீரை நம்பியிருக்கும் தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் நீர் இல்லாத காரணத்தினால் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக நீர் ஊற்றுக்களில் நீர் குறைவடைந்துள்ளதால் நீரைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீர் உள்ள பிரதேசங்களுக்குத் தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மலையகத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் நீர் ஊற்றுக்களிலிருந்து வரும் நீரை சேமித்து வைக்கக்கூடிய முறை ஒன்று இல்லாதமை வறட்சியான காலங்களில் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை தொடருமானால் எதிர் வரும் வாரங்களில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதற்குச் சாத்தியம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தில் சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தாம் நாளாந்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் சிரமத்தைச் சந்திப்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.